Monday, May 20, 2024
-- Advertisement--

தமிழகத்தில் பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா கிருமி பரவல் காரணமாக அதிக மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டுள்ளன. அதன் பின்னர் மே மாதம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் போக்குவரத்து இரு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளன.

.இந்நிலையில் மீண்டும் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து உள்ளது. இது சம்பந்தமாக சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் நீண்ட நாட்களாக பேருந்துகளின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏழை, எளிய மக்கள் பேருந்தில் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அரசுப்பேருந்துக்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கலாம் என் அறிவுறுத்திய நிலையில் அதனை கண்டித்து தமிழகத்தில் உடனடியாக பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயங்க அனுமதிக்கப் பட்டுள்ள புதிய அரசாணையை திரும்பப் பெறக் கோரி வரும் ஜூன் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles