கூகுள் நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. கூகுளில் மின்னஞ்சல் சேவையை தொடர்ந்து மக்களுக்கு உபயோகமான பல சேவைகளை வழங்கி வருகிறது.
ஆப் சீட் என்ற application கூகுள் வழங்கி வருகிறது. அந்த அப்ளிகேஷனில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர் சென்னை ஆவடியை சேர்ந்த ஸ்ரீராம் கேசவனை பாராட்டியுள்ளது கூகுள் நிறுவனம்.
பொறியியல் பட்டதாரியான ஸ்ரீராம் ஆப் சீட் அப்ளிகேஷன் தயாரிப்புக்கான செயலியில் வாடிக்கையாளர்கள் தகவல்கள் மற்றும் புதிய படைப்புகள் திருடப்படுகிறது என்று கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளர்.
ஸ்ரீராமின் கோரிக்கையை ஏற்ற கூகுள் நிறுவனம் அவருக்கு இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி பாராட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீராம் கேசவன் என்ற பெயரை கூகுள்ளின் HALL OF FAMEல் இணைத்து கௌரவம் செய்துள்ளது.
தமிழக இளைஞர் ஸ்ரீராமுக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.