தற்பொழுது இந்துக் கடவுள்களுக்கு பிரம்மாண்டமாக கோயில் வைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிலை கலாச்சாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது.
சமீபத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மிக உயரமான சிலையை வைத்து மத்திய அரசு சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பிரம்மாண்டமான அனுமான் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
215 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் வைக்கப்பட உள்ளது. இந்த சிலையை வைக்க ஆகும் மொத்த செலவு 1200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலையை சாமி ஆனந்த் சரஸ்வதி என்பவர் ஜென்மபூமி டிரஸ்டின் தலைவராக உள்ளார். இவர் ஆஞ்சிநேய சிலை ரூபாய் 1500 கோடி செலவில் வைக்க உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் சிலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.