நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்ற போது காலை சைக்கிளில் வந்து தனது ஓட்டை பதிவு செய்த விஜய் அன்று மாலையே விமானம் மூலம் ஜார்ஜியா சென்றார்.
ஜார்ஜியாவில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினார்கள். இந்நிலையில் விஜய் ஜார்ஜியா வந்திருப்பது தெரிந்து அங்கிருந்து அவரது ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஜார்ஜியாவில் விஜய்யின் படப்பிடிப்பு ஆரம்பம் என்று நெல்சன் அருகில் விஜய் சொட்டர் போட்டுக்கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.
ஜார்ஜியாவில் விஜய பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் கூட தொடங்கினர் அப்பொழுது ஜார்ஜியாவில் வசிக்கும் ஒரு குட்டி பெண் ரசிகை ஒருவர் தளபதி விஜய்யை சந்தித்து அவருடன் பேசி மகிழ்ந்து ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது ஜார்ஜியாவில் இருந்து சென்னை வந்துள்ள விஜய் மே 3 ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் இன்று தகவல் வெளிவந்து உள்ளது.
நடிகர் விவேக் விஜய்யின் நெருங்கிய நண்பர். விவேக் இறந்த நேரத்தில் விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் நடிகர் விவேக்கின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியவில்லை. தற்பொழுது சென்னை திரும்பி உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.