Sunday, May 19, 2024
-- Advertisement--

எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? புதிய ரூல்ஸ் போடும் நாடு..!!

அனைத்து மக்களும் ஓடி ஓடி உழைப்பது அரைவயிறு உண்பதற்கு தான். அனைவருக்கும் சாப்பாடு என்பது மிக முக்கியமான ஒன்று. பலர் சாப்பிடுவதற்கு என்றே உரைப்பர். இந்நிலையில் வட கொரியாவில் பல்வேறு சூழ்நிலை காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வட கொரிய சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக அமெரிக்கா வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்ததைத் தொடர்ந்து மூன்று முறை புயல் தாக்கியது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, புயல் போன்ற பல்வேறு காரணங்களால் வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது, இதனால் உணவு பொருட்கள் வீணாவதைத் தடுக்க அதிபர் கிம் ஜாங் உன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதன்படி கொரியாவில் நிகழ்ச்சியில் என்ன உணவு வகைகள் பரிமாறலாம், எந்தெந்த உணவு வகைகளில் எந்த உணவை சாப்பிடலாம் என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது, உணவை வீண் செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles