வருடா வருடம் தை மாதம் தமிழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கொண்டாடும் பண்டிகை பொங்கல். இது முழுக்கமுழுக்க விவசாயிகளுக்கான பண்டிகை. இந்த பண்டிகைக்கு அந்த மாநில விடுமுறை மட்டுமே தவிர பொது விடுமுறையாக இந்தியா முழுவதும் இல்லை.
இந்நிலையில் இந்த தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை பொங்கல் பண்டிகைக்காக அளிக்கப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை தேசிய பண்டிகையாக மாற்று அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. தமிழர்கள் பலர் இந்த விடுமுறைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்