நயன்தாரா தமிழில் முன்னணி முன்னணி நடிகை இடத்தை பல வருடங்களாக தக்க வைத்து வரும் ஒரு நடிகை. இந்த காலத்தில் ஒரு வருடமே தாக்கு பிடிக்க முடியாமல் நடிகைகள் திரையுலகை விட்டு விலகும் நேரத்தில் இவருடைய விடாமுயற்சியினால் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்த நயன்தாரா தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தை தொடங்கிய நயன்தாரா 2020 தற்பொழுது வரை திரைப்பயணத்தில் பயணிக்கும் போது பல தடங்கல்கள், காதல் தோல்விகள் . நயன்தாரா தனது விடாமுயற்சியால் பிறர் சொல்வதை காதில் வாங்காமல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு நடித்து கொண்டே இருந்தார் தற்போது தமிழில் முன்னணி நடிகையாக ஜெயித்துக் காட்டியுள்ளார்.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அடுத்த வருடம் இவருக்கு திருமணம் செய்யலாம் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்துள்ளார். அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக விரதம் முறையாக எடுத்து கோயில் வழிபாடுகளை செய்தாராம்.
மூக்குத்தி அம்மன் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் முன்பெல்லாம் அம்மன் கதாபாத்திரம் என்றாலே மீனா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் தான் நடிப்பார்கள். சமீப காலமாக அவர்கள் அம்மன் வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை அது போல படங்களும் அமையவில்லை ஆனால் தற்பொழுது நயன்தாராவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றதால் அம்மனுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்.
தலையில் கிரீடம் கையில் சூலம் கழுத்தில் நகைகள் என்று மூக்குத்தி அம்மனாக தரிசனம் கொடுத்தது போல் அமெரிக்காவில் தேர்தலில் ஜெயித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாராவிற்கு தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது ஒரு ரசிகர் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் வேடத்தை பென்சிலில் வரைந்து அதனை நயன்தாராவுக்கு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதனை நயன்தாரா பார்த்து அழகாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.