ஒரு மனிதனை நரம்புகள் தான் இயக்குகிறது. நரம்புகள் இயக்கம் சரியில்லை என்றால் அந்த மனிதனின் உடல் உறுப்புகள் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். நரம்புகள் வலுவாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி பட்ட நரம்பிற்கு சரியான மருத்துவர்கள் நமது நாட்டில் மிகக் குறைவு. அந்தக் குறைவான மருத்துவர்கள் எண்ணிக்கையில் தஞ்சையில் வாஞ்சிலிங்கம் ஒரு பிரபலமான நரம்பியல் மருத்துவராக இருந்து வந்தார்.
நரம்பு சம்பந்தமான எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் அதற்கு அவர் கொடுக்கும் மருத்துவத்தில் அதனை சரி செய்ய முடியுமா முடியாதா அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சிறந்த மருத்துவத்தை அளித்த ஒரு மருத்துவர். அறுவை சிகிச்சையின்போது மூளைகளை எடுத்து அதிலுள்ள துல்லியமான நரம்புகளை தனது வைத்தியத்தில் சரி செய்த மனிதர். மூளை மற்றும் நரம்பில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் அதனை சரியாக புரிந்து கொண்டு அதற்கான சரியான மருத்துவம் கொடுப்பவர்.
தஞ்சாவூரில் மூளைநரம்பியல் துறையில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவர் வாஞ்சிலிங்கம் இன்று காலமானார். உடல் அடக்கம் பட்டுக்கோட்டை அருகே தனது சொந்த ஊரான விக்ரமம் கிராமத்தில் நாளை நடைபெற இருக்கிறது.