தமிழ் சினிமாவில் முக்கியமான சீனியர் பாடகர் என்றால் எஸ்.பி . பாலசுப்ரமணியம் அவர்கள் தான் இது மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழியிலும் 40 ஆயிரத்திற்கும் பாடி இருக்கிறார்.
எஸ்.பி.பி அவர்கள் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அனைவரும் எஸ்பிபி மீண்டும் உடல்நிலை சரி ஆகி நலமுடன் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “கடந்த 5ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு எஸ்பிபி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் எஸ்பிபி திரும்ப நலம் பெற்று வரவேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர்.