இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி வருகிறது. RC15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடித்துவருகிறார்.
மேலும் இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம், சுனில் ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார். இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனே அருகே பிரம்மாண்டமாக செட் அமைத்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் நடந்து வருகிறது. மேலும் ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த சில மாதங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
அதோடு அரசியல் கதையை கொண்ட இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பிரபல மலையாள ஹீரோ மோகன்லாலிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பல தெலுங்கு படங்களில் நடித்து வருவதால் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
மேலும் ஊழல் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் மோகன்லால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு நெகட்டிவ் கேரக்டரில் அவருக்கு நடிக்க விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது.