Sunday, May 19, 2024
-- Advertisement--

நயன்தாராவை பாலிவுட்க்கு பார்சல் செய்ய நினைக்கும் பிரபல இயக்குனர்…!!!

தென்னிந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாரா இதுவரை பாலிவுட் படத்தில் நடிக்கவில்லை. சமீபத்தில் அறிமுகமான நடிகைகள் கூட பாலிவுட்டுக்கு சென்று நடித்து வரும் போது நயன்தாரா மட்டும் ஏனோ பாலிவுட் பட உலகை திட்டமிட்டு தவிர்த்து வருவது போல் தெரிகிறது. தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு தனக்கு நேரம் சரியாக இருப்பதாகவும் புதியதாக ஒரு பணி சூழல் தனக்கு சரிப்பட்டு வராது என்றும் அவர் பாலிவுட்டில் நடிக்காதற்கான காரணம் என்று சொல்லி வந்தார்.

இந்நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் இந்தி திரைப்படத்தில் நயன்தாராவை நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பிகில் படத்திற்கு பிறகு அட்லீ ஷாருக்கானை விடாமல் துரத்தி கதை சொல்லி அவரது ஒப்புதலை பெற்றதாகவும். அவரது ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க அவரிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லி இயக்கிய ராஜா ராணி, பிகில் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

தனக்கு மிகவும் தெரிந்த இயக்குனர் முன்னணி ஹீரோ என்பதால் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பார் என்று தெரிகிறது. பாலிவுட் படங்களின் வியாபார பரப்பு மிகப்பெரியது என்பதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலும் தென்னிந்திய படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை போல் நயன்தாரா இருமடங்கு சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles