Sunday, May 5, 2024
-- Advertisement--

பழனி முருகன் கோவிலில் 600 படிகள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் நடிகை சமந்தா.

இவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை சமந்தா 10 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் ஆன ‘சகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நடிகை சமந்தா படுக்கையில் இருந்து கூட சில நாட்கள் எழ முடியாமலும் கடுமையான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக பதிவில் கூறியுள்ளார்.

இதை எடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு ஆறுதல் கூறி வந்தனர். இதைத்தொடர்ந்து அறிய நோய்க்கான சிகிச்சையை உள் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

அப்போது உடல்நலம் பெற வேண்டி கோவில் படிகட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார். நடிகை சமந்தா பழனி கோவிலில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படி வழிப்பாதைகளில் நடந்து சென்ற சமந்தா கிட்டத்தட்ட 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் குணமடைவீர்கள் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் நடிகை சமந்தா சமீப காலமாக கைகளில் எப்போதும் ஜெபமாலையுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles