நடிகர் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்ற வாரம் பிக்பாஸ் எவிக்ஷன் எபிசோடை முடித்து விட்டு உடனடியாக அமெரிக்கா சென்றுவிட்டார். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதனால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி “அடுத்த சில நாட்களில் அப்பாவின் குரலைக் கேட்கலாம்” என ட்விட்டர் வாயிலாக கமல் தரப்பிலிருந்து செய்திகள் உறுதியாகி உள்ளது. அதோடு சில வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி அல்லது சிம்பு சில வாரங்களுக்கு தொகுத்து வழங்குவார்கள் என செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இருவருமே இந்த தகவலை மறுத்துவிட்டனர். மறுபடியும் நேற்று இரவு கமல் வீடியோ வாயிலாக தொகுத்து வழங்குவார் என முடிவு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை சேனல் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதோடு இதற்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வந்தனர். ஆனால் இன்று கமலின் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவமனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம். அதேபோல் பிக்பாஸ் தரப்பிலும் ஜூம் வழியாக நிகழ்ச்சியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மருத்துவமனையில் ஜூம் வாயிலாக நிகழ்ச்சியை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் உடனடியாக சேனல் தரப்பிலிருந்து நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார்கள்.
ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன் விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக கலந்து கொண்டுள்ளார். ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே தெலுங்கு பிக்பஸ் 3 வது சீசனில் நாகார்ஜுனாவுக்கு பதிலாக ஒரு வாரம் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த எபிசோடில் நாகார்ஜுனா வீடியோ காலிங் ரம்யா கிருஷ்ணனிடம் பேசியது போல் இந்த வாரம் கமல்ஹாசன் ரம்யா கிருஷ்ணனிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.