Sunday, May 19, 2024
-- Advertisement--

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதி உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதி உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ் நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் \”Ex-Gratia for Covid-19\” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles