அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக ஆட்சியை விமர்சிப்பதும் கேலி செய்வதும் தொடர்ந்து வழக்கமாக வைத்து வருகிறார்.
அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்கள் அதிமுகவில் சசிகலா நுழையவே முடியாது ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்து அதிமுகவை ஆள்வது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தான் ஏற்க வேண்டும் என்று தனது கருத்தைத் அடிக்கடி முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில்கூட ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே திமுக அரசு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளதாகவும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு முறை உங்களுக்கு வழங்கப்படும் பணம் கூட தர இயலாத இயலாமை அரசு மாதந்தோறும் மகளிருக்கு எப்படி ஆயிரம் ரூபாய் கொடுக்கும் இந்த அரசினால் மக்கள் படும் அவதி என்று பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த சில ட்விட்டர்வாசிகள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே மக்களுக்கு நிறைய செய்து வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களிலேயே 4000 ரூபாய் நகை கடன் தள்ளுபடி மழை நீரால் பாதித்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து போன்ற நல்ல விஷயங்களை அரசு செய்து வருகிறது என்று கூறி வருகிறார்கள்