தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் தமிழக முதல்வராக இருக்கும் திரு M .K . ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி ட்வீட்டரில் பதிவிட்டார்.
தற்பொழுது மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்கள் இன்று காலமானதை தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பெரும் மனவேதனை அடைந்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலமாக நடிகர் பாண்டு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் நகைச்சுவை நடிகரும், அஇஅதிமுகவின் வெற்றி கொடியை வடிவமைத்து,இரட்டை இலை சின்னத்தை வரைந்த பெருமைக்குரியவருமான திரு.பாண்டு அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
திரு.பாண்டு அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.