ஆர்யாவிற்கு திருமணம் செய்து கொள்ள பெண் தேவை, ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பப்படும் பெண்கள் அணுகலாம் என்று விளம்பரம் கொடுத்து அதில் 15 பேரை தேர்வு செய்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்று நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது ஒரு தனியார் தொலைக்காட்சி.
அந்த தொலைக்காட்சியின் வழியாக 15 பெண்களுடன் ஆர்யா பழகி அவர்களில் மூவரை தேர்வு செய்து அந்த மூவரில் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று அறிவித்திருந்தார்கள்.
ஆர்யாவிற்கு சிறந்த ஜோடி என்று அவரது நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட அபர்னதி அந்த நிகழ்ச்சியின் கடைசி வரை செல்லாமலே வெளியேறினார் அதன்பின் சீதாலஷ்மி, சுஷானா,அகதா ஆகிய மூன்று பெண்களையும் தேர்வு செய்து வைத்திருந்தார் ஆர்யா. இந்த மூவரில் ஒரு பெண்ணை ஆர்யா மணக்கப் போகிறார் என்று மக்களும் மற்றும் அந்த மூவரின் பெற்றோரும் ஆவலுடன் காத்திருந்தனர் கடைசி நேரத்தில் தீராத விளையாட்டு பிள்ளை விஷால் போல மூன்று பெண்களுக்கும் டாட்டா காட்டினார் ஆர்யா.
எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று சொல்லி கடைசி வரை அந்த மூவரில் ஒருவரை கூட திருமணம் செய்து கொள்ளாமல் பல மாதங்கள் ஓட்டி வந்த ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த மூவரில் ஒருவர் தான் சீதாலக்ஷ்மி எம்பிஏ படித்த அவர் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார் அதன்பின் பிஸ்னஸ் தொடங்கி அதனை கண்காணித்து வருபவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். அந்த நிகழ்ச்சியில் பார்க்க ஹோம்லியாக இருந்த சீதாலக்ஷ்மி பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
பிகினி போன்ற உடையணிந்து காட்டக்கூடாத இடத்தை தலையணை வைத்து மறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுபோல புகைப்படம் வெளியிட்டு பிரபலமடைந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.