Thursday, May 2, 2024
-- Advertisement--

திருச்சியில் MGR அவர்களின் சிலை உடைப்பு பொங்கி எழுந்த எடப்பாடி பழனிச்சாமி..!!! காவல்துறை நடவடிக்கை எடுக்க கூறி கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த பின் ரவுடிகளின் அராஜகம் தலைதூக்க போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வந்தார்கள் ஆனால் அவர்கள் சொன்னதை மாற்றி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் போட்ட முதல் கையெழுத்து மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாம் சரியான தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் அவர்களது திருவுருவச்சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் வழியாக கேட்டுக்கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலளித்த அவரது தொண்டர்கள் நம் எதிரிகள் நமக்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்து கொண்டே இருக்கிறார்கள். அம்மா உணவகம் முதல்நாளே ஆட்சிக்கு வந்து சூறையாடப்பட்டது தற்பொழுது எம்ஜிஆர் சிலை உடைப்பு என்று விவாதித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பில் யாரோ ஒரு சிலர் செய்த தவறால் அவர்களை குறை சொல்லுவது நாகரிகம் அல்லஆனால் இது போல தலைவர்கள் சிலை உடைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles