தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மக்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு கலந்து கொள்வதற்காக கோதவாடி கிராமத்திற்கு சென்று உள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தீயசக்தி திமுகவின் அப்பகுதியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை முன்னிறுத்தி பொங்கல் வைக்க கூடாது என்று கிராம மக்களை மிரட்டி உள்ளார்கள்.
இந்த மிரட்டலுக்கு பயப்படாத அக்கிராம மக்கள் வருண பகவானுக்கும் குளக்கரை அம்மனுக்கு பொங்கல் வைத்து நிகழ்ச்சியினை சீரும் சிறப்புமாக கொண்டாடி வந்தனர் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் 40 அடியாட்களுடன் வந்து பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மீது அங்கிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு பொங்கல் வைத்து வழிபட்ட பெண்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்செயலை அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததோடு அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் மற்றும் சேர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் துணை சபாநாயகர் தேர்தல் பிரிவுச் செயலாளரும் மண்ணின் மைந்தரான பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பட்டப்பகலில் காவல்துறையினரின் முன்னிலையிலேயே திமுக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்றால் சாதாரண சாமானிய மக்களின் நிலை என்ன என்பது எண்ணிப் பார்க்கவே முடியவில்லை இந்த வீடியோ அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து திமுகவினரால் சாமானிய மக்கள் அதிகாரிகள் தொடர்ந்து தாக்குதலுக்குப் பட்டு வருகின்றனர் கொலை கொள்ளை பாலியல் வக்கிரங்கள் நாள்தோறும் நடந்தவண்ணம் உள்ளது மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே பல இடங்களில் திமுகவினர் தாக்குதல் ஆகி வருகின்றன
அதே நேரத்தில் திமுகவினருக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கியமான இடங்களில் பணியமர்த்த படுகின்றனர் அவர்களை முன்வைத்து தமிழகமெங்கும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதியில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் இந்த ஆளும் கட்சியினரின் வன்முறையை கடுமையாக கண்டிக்கிறேன் இது போன்ற சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த சட்டரீதியான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மீதும் மக்கள் மற்றும் மகளிர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விடிய அரசின் காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் திரு ஸ்டாலின் அவர்கள் தவறு செய்த திமுகவினர் மீதும் இதை வேடிக்கை பார்த்த காவல் துணை கண்காணிப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.