Sunday, May 19, 2024
-- Advertisement--

சசிகலா விடுதலை ஆனால் ஆட்சி இப்படித்தான் இருக்கும் முதன்முறையாக வெளிப்படையாக சொன்ன எடப்பாடியார்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அனைவரும் ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைத்து எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார்களா அதே மரியாதையை சசிகலாவுக்கும், அவரது தொண்டர்களால் கொடுக்கப்பட்டது.

முதல்வராக இருக்கும் எடப்பாடி உட்பட அனைவரும் சசிகலாவிற்கு கும்பிடு போட்டு கீழே குனிந்து அவர்களிடம் பேசிவந்தனர். இந்நிலையில் சசிகலா சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பராப்பன அக்ரஹார சிறையில் கட்டவேண்டிய அபராத தொகையாக ரூபாய் 10 .10 கோடி நேற்று செலுத்தப்பட்டது என செய்திகள் வெளிவந்தது.

இதை தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சசிகலா விடுதலைக்குப் பிறகும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த மாற்றமும் வராது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles