கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த தமிழக அரசு தற்போது 3 மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ்பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் உள்ள மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை ஆனால் பேருந்தில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று கூறி உள்ள அரசு புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கும் இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இணையதளம் மூலம் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இ-பாஸ் பெறுவதற்கான இணையத்தளம் இதோ
https://eregister.tnega.org/