திமுகவை சேர்ந்த இருவர் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அராஜகம் ஆரம்பித்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தனர். அதிமுக அரசு மக்களுக்காக கொண்டு வந்த அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலையிலிருந்து பரபரப்பாக பரவி வந்த இந்த வீடியோவை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரவாயில் தொகுதியில் பெயர் பலகை எடுத்த இரண்டு கழகத் உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறியும், பெயர் பலகையை அதே இடத்தில் வைக்கக் கோரியும் , அவர்கள் இருவரையும் கழகத்திலிருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை பார்த்து மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.