Thursday, May 2, 2024
-- Advertisement--

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்க வைத்த விஜயகாந்த்..!!! கேப்டன் கேப்டன் என்று அதிர்ந்த தொண்டர்களின் சத்தம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய பிரச்சாரத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளார் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மக்கள் மீது அலாதி அன்பு கொண்டவர். ஒரு நேரத்தில் இவருடைய கம்பீரமான குரலை கேட்பதற்காகவே மக்கள் திரள்வார்கள். விஜயகாந்த் நல்ல மனிதர் தைரியமான மனிதர் மக்களுக்கு நிறைய நல்லது செய்வார் என்று பெரிதாக மக்கள் எதிர்பார்த்தனர்.

ஒரு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து தைரியமாக சட்டசபையில் கேள்வி கேட்டவர்.

கேப்டனின் தைரியமும் துணிச்சலும் மக்கள் அனைவரையும் கவர்ந்தது. சமீபகாலமாக விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக வெளிநாடுகள் சென்று சிகிச்சை பெற்று வந்தார். என்னதான் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பழைய நிலைக்கு விஜயகாந்த் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் திறந்த வேனில் நின்றுக்கொண்டு கையை மட்டும் அசைத்து ஓட்டு சேகரித்தார். கையை தூக்க முடியாமல் அவரது உதவியாளர் கையை தூக்கி வேனில் மற்றொரு பக்கம் வைத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

சிங்கம் போன்ற மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பார்ப்பவர்கள் மனதை கலங்க வைக்கிறது. விஜயகாந்த் பேசுவதை கேட்க திரண்ட கூட்டம் விஜயகாந்தின் பேசமுடியாத இந்த நிலையை பார்த்து கண்கலங்கி கேப்டன் கேப்டன் என்று கத்த தொடங்கினர். மக்கள் கேப்டன் கேப்டன் என்று அழைக்க விஜயகாந்த் காதில் வாங்கிக்கொண்டு மௌனமாக அங்கிருந்து சென்றார்.

ஒரு நேரத்தில் பிரச்சாரம் முடிந்தவுடன் தொண்டர்களை பார்த்து பத்திரமாக வீட்டுக்கு போகணும் போயிட்டு எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்வாராம் விஜயகாந்த் அந்த அளவிற்கு தொண்டர்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்க்கு இப்படி ஒரு நிலைமை வர வேண்டுமா என்று கலங்குகிறார்அவரது தொண்டர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles