Friday, May 3, 2024
-- Advertisement--

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் நான் கட்சி வேட்டி கட்டி கலந்து கொள்வேன்- திண்டுக்கல் லியோனி சபதம்.

திண்டுக்கல் லியோனி சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவருடைய நகைச்சுவை நிறைந்த பேச்சு பலரையும் ரசிக்க வைக்கும். திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் என்றாலே மக்கள் தவறாமல் டிவியில் ரசித்து பார்த்து வந்தார்கள்.

இந்தத் தேர்தலில் லியோனி அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பெண்களைப் பற்றி பேசிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது கூட இந்தத் தேர்தலில் பெண்களை தவறாக பேசிய லியோனிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமென்று கூறியிருந்தார்.

அந்த அளவிற்கு பெரும் எதிர்ப்பை சந்தித்த லியோனி ஒரு வழியாக தீவிர பிரச்சாரத்தை முடித்துவிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது “திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் திமுக கட்சி வேட்டி கட்டிக்கொண்டு அதில் கலந்து கொள்வேன். அந்த வேட்டியை தலைவரே எனக்கு வாங்கித் தருவார் என்று நான் சபதம் ஏற்றேன். அதற்காக அந்த வேட்டியை தலைவரிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நம்பிக்கையுடன் காத்திருப்போம்” என்று கூறி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles