Saturday, May 4, 2024
-- Advertisement--

அப்பாவுடன் நடிக்க இருக்கும் அந்த பொன்னான நாளுக்காக காத்திருக்கிறேன்- துருவ் விக்ரம்.

ஆதித்திய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் துருவ் விக்ரம். நடிகர் விக்ரம் மகன் என்பதால் துருவ் விக்ரம் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதே போல் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் துருவ் விக்ரமிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கர்ணன் படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கும் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைக்களத்தை கொண்ட படத்தில் கிராமத்து இளைஞனாக நடிக்கிறார் துருவ் விக்ரம்.

இதற்காக இரவும் பகலும் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்றி வருகிறார். இந்நிலையில் விக்ரமின் 60 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இதில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் துருவ் விக்ரம்.

இந்த புகைப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு போக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அனைவரது எதிர்பார்ப்பும் நிறைவேறும் வகையில் எல்லாம் சரியாகி மிக விரைவிலேயே பழைய நிலைக்கு திரும்பவும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாவை வென்று விரைவில் மீண்டு வருவோம் பழையபடி வாழ்க்கையை ஜமாய்போம் என்று பதிவிட்டுள்ளார்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles