தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனது அசுரத்தனமான நடிப்பால் ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகர். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு தன் நடிப்பை மெருகேற்றிக் கொண்டே சென்ற நடிகர். தனுஷின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் இருக்க சில மாதங்களுக்கு முன் தான் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிந்தார்.
ரஜினியும் சமாதானம் செய்து பார்க்க கடைசியில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால் ஒரு அளவிற்கு மேல் உங்கள் இஷ்டம் என்று ரஜினியும் ஒதுங்கிவிட்டார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நடந்து குழந்தை இருந்தும் விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா.
தற்பொழுது தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுககு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் உண்டு இந்த சூழ்நிலையில் விவாகரத்து தவறான முடிவு என்று எவ்வளவோ போராடியும் பிரிவது தான் சரி என்று இருவரும் பிரிந்தார்கள்.
தனுஷ் தற்பொழுது யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்திலும், வாத்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா தற்பொழுது பயணி என்ற மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வெளியிட்டு உள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் தனுஷ் திடீர் என்று தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் என்னுடைய தோழி ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள் என்று கூறியதோடு கடவுள் ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டு இருந்தார்.
தனுஷின் இந்த வாழ்த்தினை பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தனுஷ் என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மனைவியை தோழி என்று பதிவிட்டு இருக்கும் தனுஷ் உண்மையிலே தோழியாக நினைத்து இருந்தால் இந்த விவாகரத்து பிரிதலே தேவை இல்லையே என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.