தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனது அயராத உழைப்பால் உயர்ந்த முன்னணி நடிகர்.
முதலில் இந்த மூஞ்சி படத்தை எல்லாம் யார் பாப்பாங்க என்று கூறிய வந்த ரசிகர்களை தன்னுடைய படத்தை விரும்பிப் பார்க்க வைத்தவர் தனுஷ். ஆரம்பத்தில் தனுஷ் படங்கள் என்றால் கிளாமர் நிறைந்த காட்சிகள் இருக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தாலும் அதன் பின் சுதாரித்துக் கொண்ட தனுஷ் தன்னுடைய படத்தில் காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக கொண்டு சென்றார். தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்தது தனுசுக்கு போரடித்துப் போய் வித்தியாசமான கதைகளை கேட்டு அதில் நடிக்க தொடங்கினார்.
தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை கமர்சியல் படங்களுக்கு நடுவில் வரும் வித்தியாசமான படங்கள் அதாவது காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் இவருடைய நடிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
குறிப்பாக தனுஷின் அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ திரையுலகம் மட்டும் அல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களும் மிரண்டு போனார்கள் அந்த அளவிற்கு தனுஷ் அசுரன் படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் அதனைத்தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்டதாக இருக்கிறது.
தற்பொழுது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அதன்பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என்ற படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் என்பவர் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார் தற்பொழுது இந்த படத்தில் படு பிஸியாக இருகுகிறார் தனுஷ்.
தற்பொழுது திருச்சிற்றம்பலம் படம் குறித்து அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்பொழுது புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. ஜேஜே கலைக்கல்லூரியில் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் டெலிவரி பாயாக சில காட்சிகள நடித்துள்ளார் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.