தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட இல்லற வாழ்க்கையிலிருந்து இருவரும் பிரிவதாக ஜனவரி மாதம் அறிவித்தனர். இருவரும் பிரிந்து ஒரு மாதத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ரா உடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் தனுஷ் மலைப் பின்னணியில் யாத்ரா உடன் நேரத்தை செலவிடுவது போல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவதை இந்த படத்தில் காண முடிகிறது.
இந்தப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அதோடு செல்வராகவன் இயக்கத்தில் நான்காவது படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதோடு தனது இரண்டு குழந்தைகளுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் பெற்றோர்களாக இணைய முடிவு செய்துள்ளதாக இருவரின் நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் மாறன் திரைப்படத்தை நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதோடு நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தே க்ரெய் மேன், வாத்தி/ சார் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்கள் கைவசம் உள்ளது.