Monday, May 6, 2024
-- Advertisement--

தாய் இறந்த தகவல் அறிந்தும் வராத மகன்கள்.. தாயை தோளில் நான்கு கி.மீ சுமந்து இறுதிச் சடங்கு செய்த மகள்கள்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

தாய் இறந்தது அறிந்தும் வராமல் புறக்கணித்த மகன்களால் அவரது உடலை நான்கு கி.மீ தூரம் சுமந்து சென்று மகள்களே இறுதி சடங்கு செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஜதி நாயக் என்ற மூதாட்டி காலமானார்.

இவருக்கு இரு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி கணவன் வீட்டில் வசிக்கின்றனர். மகன்களும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கடந்த பத்து ஆண்டாக மகன்கள் தாயை பார்த்துக் கொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மூதாட்டி சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவு செலவுகளை சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி உயிரிழந்த தகவலை அக்கம்பக்கத்து வீட்டார் அவர்களுடைய இரு மகன்களுக்கு தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் இறுதி சடங்கு செய்ய வரவில்லை.

இதையடுத்து நான்கு மகள்களும் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். தாயின் சடலத்தை நான்கு கி.மீ தூரம் உள்ள சுடுகாடு வரை சுமந்து சென்று அவர்களே அனைத்து காரியத்தையும் செய்து முடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles