சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை டுவிட்டரில் மன மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. அதில் அவரது தாயார் மணமகள் ஆக விரும்புவதையும், மங்களகரமான நாளுக்காக தனது தாயார் காத்திருப்பதாகவும் பதில் கூறியிருந்தார்.
can’t believe mom is getting married GURL U SLAYY pic.twitter.com/Jo5LwlTlRb
— mommy (@alphaw1fe) December 15, 2021
தற்போது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்து வருவதையும் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த பதிவு எனது அம்மா திருமணம் செய்து கொள்வதை என்னால் நம்ப முடியவில்லை எனக்கு உற்சாகமாக உள்ளது என தெரிவித்து இருந்தார். பின்னர் அவரது தாய் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை பதிவில் பதிவிட்டுள்ளார்.
அதோடு இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பின்னர் மற்றொரு பதிவையும் பதிவிட்டு இருந்தார் அதில் 15 வருடங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விலகி விட்டதாக ஒரு நெட்டிசன் டிவீட்டுக்கு பதிலளித்துள்ளார்.
அதோடு நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளார்.
அதோடு தனது தாயின் மோதிரம் மற்றும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு உள்ளார். மேலும் மணமகனும் மணமகளும் விரைவில் மணமுடிக்க போவதாகவும் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த டீவீட்டுகளை நான் என் எதிர் காலத்தில் பார்க்கும்போது இன்னும் சந்தோஷம் அடைவேன் என பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.