ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது ஆந்திர காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷ்யாம் சுந்தர் இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி என்பவர் 2018 ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்று துணை சூப்பிரண்டு ஆக பணியாற்றி வருகிறார்.
தனது தந்தையை விட உயர் அதிகாரியான ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தார் அப்போது பணியின் நிமித்தமாக அவரது தந்தை ஷியாம் சுந்தர் அங்கு நின்று கொண்டிருந்தார்.
ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவர்களை கண்டவுடன் சல்யூட் அடித்தார் ஷியாம் சுந்தர். தனது மகளுக்கு சல்யூட் அடித்து அதை பெருமையாக கருதும் ஷ்யாம் சுந்தர் நாங்கள் வீட்டில் தான் தந்தை மகள் உறவு பணி என்று வந்துவிட்டால் அவர் என்னுடைய உயர் அதிகாரி அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
தந்தை தன் மகளுக்கு சல்யூட் அடித்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி தற்போது அவர்களது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.