Friday, May 10, 2024
-- Advertisement--

ஆபாச குறுச்செய்தி அனுப்பியவர் மீது காவல் துறையினரிடம் புகார் கொடுத்த சனம் ஷெட்டி…!!!

பிரபல நடிகை சனம்ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். திருவான்மியூர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் நடிகை சனம் ஷெட்டி வசித்து வருகிறார். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த அம்புலி, வால்ட்டர் படங்கள் வெளிவந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சனம்ஷெட்டி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவரை ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனது ஆபாச குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆபாச குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்அப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், ஆதாரங்களையும் காவல்துறையிடம் தொடங்கியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அடையாறு துணை ஆணையர் விக்ரமன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அனுப்பி வைத்தனர் போலீசார் விசாரிக்கின்றனர்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles