வாயில்லா ஜீவன்களை பாதுகாப்பதற்காக பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை புண்படுத்தினால் பல சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. என இந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகைப் பராமரிப்பு போன்றவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்த உள்ளது என சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மேலும் தற்பொழுது உள்ள மக்களிடம் விலங்குகள் மீதான அக்கறை மிகவும் குறைந்து வருகின்றது. எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதனால் விலங்குகள் மீது அவர்கள் கூடுதல் அக்கறை செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.