உலகெங்கும் உள்ள மக்களை கொரானா என்னும் உயிர்கொல்லி நோய் தாக்கி வருகிறது. அதற்கு ஒரே வழி தடுப்பூசி கண்டுபிடிப்பது தான். இதனால் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இதற்கான பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பலருக்கும் பெருமூச்சு விட்டு நிம்மதியாக உள்ளனர். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரானா தாக்கம் அதிகமாக இருந்து கொண்டே வந்தது.
ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரானா இரண்டாவது அலை வீசும் என கூறப்பட்டுள்ளது, இந்த நிலையில் தற்பொழுது இந்தியாவில் பிப்ரவரிக்குள் கொரானா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ரூபாய் 600 க்கு தடுப்பூசி மருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் இதே நேரத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் குழந்தை தடுப்பூசி இலவசம் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.