Monday, May 20, 2024
-- Advertisement--

COVID -19 :விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தடை …! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

கொரோனா கிருமித்தொற்றால் உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சுகாதார அமைச்சகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து துறைகளும் மூடப்பட்டு வந்துள்ளன. இதில் கோவில்கள் , பள்ளிவாசல்கள் போன்ற வழிபாட்டு தலங்கள் படிப்படியாக துவங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கத்தினால் விநாயகர் சிலைகள் அமைக்க வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது . அது என்னவென்றால் கொரோனாவின் தாக்கத்தினால் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் போன்ற மக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அறிவிப்புகளை விடுத்து உள்ளது அது என்னவென்றால் விநாயகர் சதுர்த்தியை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி கொள்ள வேண்டும். வீதிகள், கோவில்கள், தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்தல், வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் அதை நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி செயல்படாதவாறு காவல்துறையினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் இந்து அமைப்புகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles