கொரானாவின் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மக்களை பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்கள் மருத்துவ ஊழியர்கள் என அனைவரையும் இந்த கொரானா விட்டுவைக்கவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனிமை படுத்தும் முகாம்களுக்கு அழைத்து சென்று அவர்களை தனிமைப்படுத்தினர்.
சிலர் தங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து தனிமையில் இருந்தனர். இந்நிலையில் அந்த தனிமைப்படுத்தும் வார்டில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் ரகசியகாதலனோடு இருக்கும் எண்ணத்தில் வேறு ஒருவரின் கணவனான தபால்காரரை தன் கணவன் என்று பொய் சொல்லி அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்தும் முகாமில் வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த தபால்காரரின் மனைவி எனது கணவரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும் வார்டில் தனிமைப் படுத்தி உள்ளனர் என்று புகார் அளித்ததை தொடர்ந்து போலீசுக்கு சந்தேகம் எழுந்தது, இதுகுறித்து பெண் போலீசிடம் விசாரிக்கும் பொழுது தான் பெண் போலீசுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்பதும் இவர் அவரது ரகசிய காதலன் என்பதும் தெரியவந்தது.
போலீஸ்காரரிடம் திருடன் சிக்கியது போல போலீசிடம் போலீசே சிக்கியது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பிறகு இருவரையும் கண்டித்து இருவரையும் தனித் தனி வார்டில் தனிமைப்படுத்தி வைத்தனர்.