கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஹெப்பாலா பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா 65.அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயம்மா 65.இவர்கள் இருவரும் இளம் வயதிலிருந்தே காதலித்து வந்தனர். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜெயம்மா வேற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜெயம்மாவிற்கு நீண்டநாள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவரது கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.
அதேபோல் சிக்கண்ணா தனது காதலியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுடைய காதல் கைகூடும் வகையில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செல்வம்ராயண சுவாமி திருக்கோயில் அருகே உள்ள ஸ்ரீநிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதியினரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் காதலுக்கு கண்ணில்லை, நிறமில்லை, பணம் இல்லை என அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் ஏன் காதலுக்கு வயதில்லை என்று கூட கேள்விபட்டிருப்போம் இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர்களை காதலிப்பதையும் அறிந்திருப்போம்.
ஆனால் இந்த காதலுக்கு வயது இல்லை என்பதே சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த 35 ஆண்டு காதலித்தவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் 65வது வயதில் திருமணம் செய்து ஒன்று சேர்ந்து இருக்கும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.