டெல்டாவில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று . நாகப்பட்டினத்தில் கொரோனாவிற்கு 3 பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ,236 ஆக உயர்ந்துள்ளது 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்பொழுது 244 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,948 ஆக உயர்ந்துள்ளது அதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 18 பேருக்கு தொற்று உறுதியானது இதையடுத்து நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ,182 ஆக உயர்ந்தது. நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது வரை 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மற்றும் திருவாரூர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 70 , 71 வயது முதியவர்கள் 47 வயது பெண் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆதலால் நாகை மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.