சீனாவில் தொடங்கி இன்று உலகநாடுகள் அனைத்தையும் அதிர வைத்த கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று மக்களிடம் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் மக்கள் மக்களிடமே பேச பயப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுஉள்ளது.
கூட்டமாக கூடினால் கொரோனா தொற்று உள்ளவர்களால் தொற்று இல்லாத மக்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முக்கிய காரணம். இந்த வைரஸ் தாக்குதலின் பாதிப்புக்களை பற்றி அரசு தரப்பில் இருந்து பல விழிப்புணர்வு கொடுத்து இருந்தாலும் ஒரு சிலர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் எனது தான் கவலை அளிக்கிறது.
அரை ட்ரவுசர் ஒன்றை போட்டு கொண்டு அல்வா கொடுத்த நடிகை பூஜா ஹெட்ஜ்…!!! புகைப்படம் உள்ளே.
இந்த கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவுவதாக வெளிநாட்டிலும் , மக்களிடமும் பேச்சு தென்பட்டது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த தொற்று நோய் ஆய்வாளர் திரு ராமன் அவர்கள் ” கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காற்றின் மூலம் கொரோனா பரவாது. கொரோனா பாதித்தவர்கள் தும்மும் போது வரும் உமிழ்நீரில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது” என்று கூறினார்.