தமிழகத்தில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 863 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தி சில கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி உள்ளது தமிழக அரசு. குறிப்பாக மக்கள் கூடும் இடத்திற்கு அனுமதி இல்லை அத்யாவசிய தேவைக்கான கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கலாம் போன்ற விதிமுறைகளை அறிவித்திருந்தது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கிற்கு பிறகு தொற்று பரவும் வீதமும் குறைந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நேற்று 1 ,62 ,401 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 34 ,867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் மட்டும் 6297 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23863 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
ஒரு பக்கம் கொரோனா தொற்று புதிதாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும் மறுபக்கம் குணமடைவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.