Sunday, May 5, 2024
-- Advertisement--

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த 7 பேர்க்கு உருமாறிய கொரோனா..!!!

நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்குதலிலிருந்து தற்பொழுது தான் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வருகிறது அந்தந்த நாட்டு அரசு.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதுமாக 24 லட்சத்திற்கு மேல் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு முன்பு அதிகமாக இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனா தாக்குதல் இந்தியாவில் குறைந்து வரும் இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. தற்பொழுது பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு உருமாறிய வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கும், பிரேசிலில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கும் உருமாறிய வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles