உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏழை பணக்காரர் என்று பாரபட்சம் பார்க்காமல் மனித இனத்தையே முற்றிலும் அழிக்கும் வகையில் இந்நோய் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது.
நோய் அறிகுறி உள்ளவர்கள், மேலும் அனைவரையும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்திய மக்கள் அனைவரும் சுய இடைவெளியோடு தனிமையில் இருக்கின்றனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 27 , 892 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 872 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் முதன் முதலாக அரசியல் பிரமுகர் உயிர் இழந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பக்ருதீன் ஷேக் வயது 68 , இவருக்கு கொரானோ தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிர் இழந்துள்ளார் .
இந்நிலையில் இந்தியாவில் கொரானாவால் உயிர் இழந்த முதல் அரசியல் தலைவர் பக்ருதீன் ஆவார்.