யோகி பாபு தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர். யோகி பாபு முதலில் சினிமாவில் அறிமுகம் ஆன நேரத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சா என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் தனது கடமையை மட்டும் செய்து வந்த யோகி பாபு தற்பொழுது கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.
யோகி பாபு படத்தை பட போஸ்டரில் போட்டு தங்களது படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு தனது கடினமான உழைப்பால் அனைவரையும் சிரிக்க வைத்து முன்னேறி வந்துள்ளார் யோகிபாபு.
சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் யோகி பாபு வை கலாய்த்து இருப்பார். தன்னுடைய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கூட கலந்து கொள்ள முடியவில்லையாம் அந்த அளவிற்கு யோகி பிஸியாக இருக்கிறார் கல்யாணத்துல மறக்காம கலந்துக்கோங்க யோகி தாலி நீங்கதான் கட்டணும் என்று விஜய் கலாய்த்தது உண்மைதான் அந்த அளவிற்கு அடுக்கடுக்காக படங்களில் கமிட் ஆகியுள்ளார் யோகிபாபு. சொந்தமாக தங்கள் உழைப்பால் ஒரு வீடு கட்டி ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட யோகிபாபுவுக்கு தற்பொழுது குழந்தையும் பிறந்துள்ளது.
யோகி பாபு வை பற்றி சினிமா வட்டாரத்தில் கேட்டால் நல்ல மனிதர் வளரும்போதே அனைவருக்கும் நிறைய நல்லது செய்கிறார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
சமீபத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூர் சென்றிருக்கிறார் யோகிபாபு அங்கு சென்றதும் அவருடைய பழைய நண்பர்களை பார்த்து யோகிபாபு அவர்களுடன் அரட்டை அடித்துவிட்டு அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். சொந்த ஊரில் பழைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்து சென்னை திரும்பினாராம்.