நகைச்சுவை நடிகர் ராமர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமானார். அதன்பின் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பங்களிப்பை கொடுத்து வந்தார் ராமர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ராமர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலாய்த்து இருந்தார் குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் என்னா மா இப்படி பணீறீங்களே மா என்ற வசனத்தை ராமர் அவருடைய ஸ்டைலில் என்னா மா இப்படி பணீறீங்களே மா இப்படி பன்றீங்களே மா என்று கிண்டலாக நகைச்சுவை செய்தது அவருக்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.
அதன்பின் ராமர் பல நிகழ்ச்சிநிரலில் நகைச்சுவை செய்து அனைவரையும் சிரிக்க வைத்து வந்தார். ராமர் அவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ந்து வந்தது.
ராமர் நகைச்சுவை நடிகர் VIJAY TVயின் மூலம் பிரபலமானார் என்பது தான் அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு பொறுப்பான அரசு அதிகாரி என்பது யாருக்குமே தெரியாத விஷயம். மதுரைக்கு அருகில் உள்ள மேலூர் என்ற ஊர் தான் இவருடைய சொந்த ஊர். ராமர் கிருஷ்ணவேணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ராமர் ஒரு அரசு அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர் என்ன பணி செய்து வருகிறார் என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாக இருந்தது மதுரையை சார்ந்த முன்னாள் எம்பி சு வெங்கடேசன் அவர்கள் நகைச்சுவை நடிகர் ராமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் முன்னாள் எம்பி சு வெங்கடேசன் அவர்கள் கூறியிருந்தது கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக விஏஓ (VAO ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய் டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன் என்று பதிவிட்டு இருந்தார் அப்போது தான் ராமர் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல ஒரு பெரிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி என்பது தெரியவந்தது.
இந்த செய்தி வெளி வந்ததிலிருந்து இராமருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைதளம் மூலமாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.