Thursday, May 2, 2024
-- Advertisement--

இ எஸ் ஐ மருத்துவமனை டீன் எம் ரவீந்திரன் செவிலியர்கள் காலில் விழுந்து கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம்!!! விபரம் உள்ளே…

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25,000 மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் டாக்டர்களும் மற்றும் செவிலியர்களும் தங்கள் உயிரை பனையம் வைத்து தங்கள் கடமைகளை செய்து வருகின்றனர்.


இன்று மே 12 ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக உலக செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதைப்போல் கோயம்புத்தூரில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனை டீன் எம் ரவீந்திரன் அவர்கள் குழுவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் காலில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனை டீன் அவர்கள் கூறுகையில் முன்கள பணியாளர்களால் ஆன கொரோனா பிரிவில் பணியாற்றக்கூடிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் செவிலியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போன்ற தலைவர்களும் செவிலியர் தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles