Sunday, May 5, 2024
-- Advertisement--

கோவை அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.

கோவையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொரோனா நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அப்பொழுது ஆம்புலன்ஸில் இருந்து நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் செவிலியர்கள் அந்தநேரத்தில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து தீப்பற்றியது.

நின்று கொண்டிருந்த ஆம்புலன்சில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு தீப்பற்ற ஆரம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

ஆம்புலன்ஸில் யாரும் இல்லாததால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles