Thursday, May 9, 2024
-- Advertisement--

நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கே.சிவசங்கர். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதில் குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி” படத்தில் இடம்பெற்ற “மன்மத ராசா” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் கடைசியாக பாகுபலி திரைப்படத்திற்கு நடனம் அமைத்து இருந்தார். அதோடு அஜித்தின் வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு 2 பரதேசி, தில்லுமுல்லு, அரண்மனை, சர்க்கார் போன்ற படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

மேலும் நடன இயக்குனர் கே.சிவசங்கர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. ஆகையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிவசங்கர் மட்டுமின்றி அவரது மூத்த மகள், மனைவி ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவரது இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடனிருந்து குடும்பத்தினரை கவனித்து வருகிறார். 72 வயதான சிவசங்கர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் 75 சதவீதம் நுரையீரல் பதிக்கப்பட்டது. மேலும் தொடந்து சிகிச்சை அளித்தும் கவலைக்கிடமாக இருந்துள்ளார். இந்நிலையில் நடன இயக்குனர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த திரைத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளார்.மேலும் திரையுலகினர் அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles