சீனாவில் ஹுஹான் நகரில் ஆரம்பித்தது கொரானோ என்னும் கொடிய தொற்று, இரண்டே மாதங்களில் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. இக்கொடிய வைரஸ் மனித இனத்தையே அளிக்க உலகெங்கும் 150 நாடுகளுக்கு மேல் பரவியது.
இந்நோய் தொற்றால் இதுவரை 41 லட்சத்திற்கு மேல் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இத்தொற்றினால் 2 லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். மேலும் 14 லட்சத்திற்கும் மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே இந்நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் எண்ணி, நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்நோய் தொற்று ஆரம்பித்த சீன நாட்டிலேயே இதற்கான தடுப்பு மருந்தும் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது குறித்து சீன அரசு வெளியிட்ட அறிக்கையில் இதற்கான தடுப்பு மருந்து குரங்குகளுக்கு செலுத்தப்பட்டது.
முதலில் சில குரங்குகளுக்கு கொரானோ தொற்று ஏற்படுத்தப்பட்டு அதில் சில குரங்குகளுக்கு இந்த தடுப்பூசி போட்டு ஆய்வு செய்ததில் ,கொரானோ வைரஸ் அழிகிறது, இந்த தடுப்பூசியை இன்னும் மனிதர்க்கு ஆய்வு செய்யவில்லை எனவும் கூறியது.