தூத்துக்குடியில் கொரானா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் புதிய திட்ட பணிகளை அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்வுக்காக மூன்று முறை முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டு நான்காவது முறையாக நடந்தது.
முதல் முறை பிரதமர் மோடியுடன் அனைத்து மாநில முதல்வர்கள் உடனான காணொளி கூட்ட நிகழ்ச்சி மட்டும் இரண்டாவது முறை முதல்வரின் தாயாரின் மறைவு, மூன்றாவது முறை அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் 2.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்.
இந் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய முதல்வர் தெற்கு காவல் நிலையம் அருகில் மாரீஸ்வரி என்னும் மாற்றுத்திறனாளி பெண் சாலையோரம் நின்று கொண்டிருந்த இவரை பார்த்ததும் காரை நிறுத்தி அருகில் அழைத்தார் முதல்வர் பழனிசாமி
மாரீஸ்வரியின் கணவர் சின்னத்துரை, மாரீஸ்வரி தூக்கிக்கொண்டு முதல்வரின் காரின் அருகில் சென்றார் , என்று முதல்வர் என்னமா.? என்று கேக்க அவர் ” என் பெரு மாரீஸ்வரி, தமிழ் டைப்பிங் லோயர், மாற்று ஹியர் முடிச்சி இருக்கேன் எனக்கு 5 வயதில் இன்னும் ஒரு பெண் குழந்தை இருக்கு,”
மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்திட்டு வரோம், எனக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்று கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவை பெற்று முதல்வர் நீ கலெக்டர் ஆபீசுக்கு வாமா., என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் .
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாரீஸ்வரி அழைத்து சுகாதாரத் துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்த வேலையின் மூலமாக மாத ஊதியமாக மாரீஸ்வரி க்கு ரூபாய் 15,000 கிடைக்கும், குடும்பத்தை நல்ல பார்த்துக்கோ என்றார் முதல்வர்.
தமிழக வரலாற்றிலேயே மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை கிடைத்த இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது . மேலும் முதல்வரின் இந்த சுறுசுறுப்பான நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் மீம்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.