Friday, May 17, 2024
-- Advertisement--

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு நெஞ்சு வலி…!!! துரிதமாக செயல்பட்டு அனைவரையும் காப்பாற்றிய ஓட்டுநர்.

பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிகழ்வு பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் ஓட்டுனர் தனது சாதுரியத்தால் பேருந்தை விபத்து ஏற்படாமல் பத்திரமாக பேருந்தை நிறுத்தினார். ஈரோட்டிலிருந்து திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுனர் பழனிசாமி.

இவர் தினந்தோறும் பேருந்தை இதே பாதையில் ஓட்டிச் செல்வது வழக்கம். ஆனால் ஈரோட்டில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் திண்டல் அருகே செல்லும்போது ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சுதாரித்த ஓட்டுனர் பழனிச்சாமி பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றார்.

ஆனால் நெஞ்சுவலி காரணமாக அவரால் சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பேருந்து நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக ஓட்டுனர் பழனிச்சாமியை டிரைவர் சீட்டில் இருந்து இறக்கினர்.

அந்த வழியாக சென்ற வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பயணிகளை வேறு ஒரு அரசு பேருந்து திருப்பூருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles